Monday, August 27, 2012

குருவாயூர்தனில் நின்றே பாலகிருஷ்ணன்



குருவாயூர்தனில் நின்றே பாலகிருஷ்ணன்
குறையின்றி நமை காப்பான் பாலகிருஷ்ணன் 
கோகுலத்தில் வளர்ந்தவனாம் பாலகிருஷ்ணன்
கோலமயில் சிறகணிந்த பாலகிருஷ்ணன்
கோடிசூர்ய பிரகாசனாய் பாலகிருஷ்ணன்
கோலாகலமாய் காட்ஷி அளிக்கும் பாலகிருஷ்ணன்
குருவாயூர்தனில் நின்றே பாலகிருஷ்ணன் 
குறையின்றி நமை காப்பான் பாலகிருஷ்ணன் 
கோமாதாவை மேய்த்தவனாம் பாலகிருஷ்ணன் 
கோவர்தனம் தூக்கி காத்த பாலகிருஷ்ணன் 
கோபியரின் நேயனாம் அந்த பாலகிருஷ்ணன் 
கோதை மனாளனான பாலகிருஷ்ணன் 
குருவாயூர்தனில் நின்றே பாலகிருஷ்ணன் 
குறையின்றி நமை காப்பான் பாலகிருஷ்ணன் 
பாலகிருஷ்ணன் 
எங்கள் கோபாலகிருஷ்ணன் 
எங்கள் கோபாலகிருஷ்ணன்

Friday, July 13, 2012

தீபமங்கள ஜோதியே ஶ்ரீலக்ஷ்மி



தீபமங்கள ஜோதியே ஶ்ரீலக்ஷ்மி திருமால் மார்பில் உறையும் தேவி 
துதி செய்தோர்க்கு உன்னை துதி செய்தோர்க்கு துயர் பிணிபோக்கிடும் தாயே  
தீபமங்கள ஜோதியே  ...
அஷ்ட ஐஸ்வர்யம் அளித்து என்றும் அருள்வழி தனில் எமை நடத்தியே 
நித்தமும் எம்மோடு  நிலைத்து நின்றே  நிறைவான வாழ்வை எமக்களிப்பாயே  
தீபமங்கள ஜோதியே ...

பாஹி பாஹி நரஸிம்மா

பாஹி பாஹி நரஸிம்மா
பக்தபரிபாலா நரஸிம்மா

பிரகலாதவரதா நரஸிம்மா
பதிதபாவன நரஸிம்மா

சிம்மரூபா நரஸிம்மா
சங்கடஹரணா நரஸிம்மா

கமலநாபா நரஸிம்மா
கருடவாஹன நரஸிம்மா

நரஸிம்மா ஹரி நரஸிம்மா 
 நரஸிம்மா லஷ்மி நரஸிம்மா 
 நரஸிம்மா லஷ்மி நரஸிம்மா

Thursday, July 12, 2012

ரகுகுல ராமா


ராமாராமா ரகுகுல ராமா ஹே
தசரதகுமாரா ஹே தீனபந்தோ
பக்தபரிபாலா பரமதயாளா ஹே
கோசலபுத்ரா ஹே கோதண்டராமா
மாருதிசேவித மன்மதரூபா ஹே
ஜானகிநாயகா ஹே சாந்தசீலா
தசமுகமர்த்தன தசஅவதாரா
ஹே தீனபந்தோ ஹே தீனபந்தோ ஹே தீனபந்தோ

சரணம் கணேசா





சம்புகுமாரா சரணம் கணேசா ஜெய 
சங்கரிபாலா சரணம் கணேசா 
மூலாதார சரணம் கணேசா 
மூஷிகவாகனா சரணம் கணேசா 
ஏகதந்தா சரணம் கணேசா 
லம்போதரா சரணம் கணேசா 
சம்புகுமாரா சரணம் கணேசா ஜெய 
சங்கரிபாலா சரணம் கணேசா 


கஜவதனா சரணம் கணேசா 
கருணாசாகரா சரணம் கணேசா 
வக்ரதுண்டா சரணம் கணேசா 
வரப்பிரஸாதி சரணம் கணேசா 
சம்புகுமாரா சரணம் கணேசா ஜெய 


சங்கரிபாலா சரணம் கணேசா சங்கரிபாலா சரணம் கணேசா சங்கரிபாலா சரணம் கணேசா

என் அருமை செல்வனே கண்ணா





என் அருமை செல்வனே இன்னமுதே கண்ணா நீ 
வெண்ணெய் திருட சென்றாயோ வேரெங்குசென்றாயோ 


வெண்ணெய் திருடி தின்னும் இன்பம் வேரெதிலும் இல்லை அம்மா 
என்னை என்ன செய்யுமுடியும் எப்படியும் நான் தப்பிடுவேன் 


கண்மணி நான் உனக்கு கை நிறைய வெண்ணெய் தருவேன் 
ஏன் இந்த பொல்லாப்பு யாரிடம் நான் முறையிடுவேன் 


நீ கொடுக்கும் வெண்ணெய் எனக்கு தேனாய் இனிக்கும் அம்மா 
நான் திருடி தின்னும் வெண்ணெயில் மர்மம் பல இருக்குதம்மா 


அடுத்தவீட்டு ஆய்ச்சியிடம் அடிவாங்கி வந்தாயோ நீ 
பக்கத்து வீட்டு பாட்டியின் பழிச்சொல்லை கேட்டாயோ 


அடிவாங்க நான் என்ன அறியாதவனா அம்மா 
தடி எடுக்குமுன் தானும் ஓடி ஒளிந்திடுவேன் தாயே 


பேதை நான் என்ன செய்வேன் பெற்றமனம் பதைபதைக்க 
காதை பொற்றி கொண்டு நானும் எத்தனை நாள் இருந்திடுவேன் 


ஏன் இந்த கவலை அம்மா என்னை உனக்கு தெரியாதா 
நான்தான் அந்த கள்வன் என்று நாலு பேரிடம் எடுத்து சொல்வேன்

என் அருமை செல்வனே இன்னமுதே கண்ணா நீ 
வெண்ணெய் திருட சென்றாயோ வேரெங்குசென்றாயோ 

எத்தனை இன்பங்களை

நீரும் நிலம் நெருப்பும் அதனுடன் வான் வாயுவும் இன்னும் பலவும் 
எமக்களித்து இன்னலற்ற வாழ்வையும் கொடுத்திட்ட 
தன்நிகரில்லாத இறைவா உத்தமா உன்தன்னை
நான் என்னவென்றுபுகழ்ந்துபாடிடுவேன் ஐயா 

எத்தனை எத்தனை இன்பங்களோ இவ்வையமதில் 
அத்தனையும் பேர் இன்பமயமே இறைவன் நமக்களித்த (எத்தனை)

ஆதவன் உதிப்பது தினம்தினம் இன்பம் அந்த 
அலைகடலும் மலையும் கண்டுகளிப்பது இன்பமே (எத்தனை)

பசுமையான பலமரங்களும் புல்லினமும் இன்பம் 
பரந்திருக்கும் இந்த பேருலகமும் இன்பமே (எத்தனை)

அழகாய் சிரிக்கும் மழலையின் குரல் இன்பம் 
அனுதினமும்மலரும் அந்த பூக்களும் இன்பமே (எத்தனை)

ஆவினங்கள் அசைந்து ஆடிவருவது இன்பம் 
ஆடிடும் மயில்களும் கூவிடும் குயிலினமும் இன்பமே (எத்தனை) 

வண்ணமயமாய் தோன்றும் வானவில்லும் இன்பம் 
வண்டினங்களின் அந்த ரீங்காரமும் இன்பமே (எத்தனை) 

மண்ணில் பேரின்பமுடன் நாம் வாழ்ந்திடவே 
எண்ணில் அடங்காத எத்தனை இன்பங்கள் 
இன்னும் பல இன்பங்களை எமக்களித்த இறைவா
என்றும் உன்னை பரவசமாய் பாடுதல் பேரின்பமே (எத்தனை)

Thursday, May 31, 2012

மாருதியை தினம்

மாருதியை தினம் மனதில் நினைப்போர்க்கு
மனசஞ்சலங்கள் எல்லாம் மறைந்திடுமே - வீர

காரியசித்தி பெற்று கவலைகள் மறைந்து நம்
கனவுகள் கைகூடி களிப்புடன் என்றும் இருக்க

வாயுகுமாரனான அந்த சுந்தரரூபனை
வானர வீரனை வரப்பிரஸாதியை
என்றும் ஶ்ரீராம நாமம் ஜபித்திடும் ஶ்ரீராமதாசனை
ரகுபதி பிரியனை தினம்நினை மனமே

Wednesday, May 23, 2012

என்ன புண்ணியம் செய்தாயோ பாற்கடலே

என்ன புண்ணியம் செய்தாயோ பாற்கடலே 
கண்ணன்வந்து அங்கு பள்ளிகொள்ளவே - நீ 

ஆலந்தளிரில் கண் வளர்ந்த ஆராவமுதன் 
அலைகடலான உன்மேல் ஆசையாய் பள்ளிகொள்ள 
என்ன புண்ணியம்.... 

மாவலியிடம்சென்று பூமியை யாஜித்துப்பெற்று 
மாசற்ற சீதையைகாக்க ராவணனைகொன்ற அந்த 
இடைப்பிள்ளையான துவாரகைசெல்வனவன் 
ஈரேழு புவனமாளும் கோவிந்தன் பள்ளிகொள்ள 
என்னபுண்ணியம்....

Thursday, May 17, 2012

ஶ்ரீராமனின் பட்டாபிஷேகம்

ஶ்ரீராமனுக்கு பட்டாபிஷேகம் செய்வோமே - எங்கள்
சீதாராமனுக்கு பட்டாபிஷேகம் செய்வோமே 

வீடுகளை சுத்தம்செய்து வாசலில் கோலமிட்டு 
வாழைமரங்கள் நட்டு மாவிலை தோரணம்கட்டி 
வீதியெங்கும் பந்தல்போட்டு விதவிதமாய் வர்ணம்பூசி 
ஜோதிமயமாய் செய்து தேவலோகம் போல்ஆக்கி
ஶ்ரீராமனுக்கு பட்டாபிஷேகம் செய்வோமே ... 

புத்தாடை கட்டி மகிழ்ந்து பூச்சூடி பெண்கள் திகழ்ந்து 
பாட்டுக் கச்சேரியும் செய்து பரதநாட்டியமும் ஆடி 
கும்மி அடித்து கொண்டாடி கூத்துக்கள்யாவும் செய்து 
மங்களவாத்யம் முழங்க மங்கையர் தீபம் ஏற்ற
ஶ்ரீராமனுக்கு பட்டாபிஷேகம் செய்வோமே ... 

புண்ணியராமனை கண்டு புகழ்மாலைகள் சூட்டிட 
புத்துயிர் தனை பெற்ற மாநகர் அயோத்தியில் 
வானரர் யாவருமே வானதிர கூச்சல் போட 
மன்னாதிமன்னர்கள் யாவருமே வந்தங்கு சேர
ஶ்ரீராமனுக்கு பட்டாபிஷேகம் செய்வோமே ... 

முப்பத்து முக்கோடி தேவர்களும் வந்து அங்கு 
திக்கெட்டு திசையும் சென்று நன்னீர் கொண்டுவர 
தங்கக்குடங்களில் புண்ணிய தீர்த்தம் நிறைத்து 
புனித மந்திரங்கள் கூறி ராமனுக்கு அபிஷேகம்செய்ய
ஶ்ரீராமனுக்கு பட்டாபிஷேகம் செய்வோமே ...

பொன்னாடைகட்டியராமன் பொலிவோடுகாட்ஷிகொடுக்க 
அன்னைசீதையும் கண்ணைபறிக்கும் அலங்காரமுடன்வர 
தங்கமயமான தம்பதிகள் இருவரும் தளிர்நடைபோட்டுவந்து 
வைரம் இழைத்த சிங்காசனத்தில் வகையாய் அமர
ஶ்ரீராமனுக்கு பட்டாபிஷேகம் செய்வோமே ... 

பலவகையான பட்ஷிணங்களும் பட்டியலிடமுடியாதபடி 
பாயசங்களும் பணியாரங்களும் கொண்டு வந்துவைக்க 
விதவிதமான பழவகைகளும் விரைவில் வந்துசேர 
விண்ணும்மண்ணும் அதிர வானவேடிக்கைகள் செய்து
ஶ்ரீராமனுக்கு பட்டாபிஷேகம் செய்வோமே ... 

பரதன் வெண்குடைபிடிக்க லக்குவனும் சத்ருகனும் சாமரம் வீச
ஹனுமன் ஶ்ரீராமனின் பதம் பணிந்து ஆவலுடன் அமர்ந்திருக்க 
குலகுரு வசிஷ்டரும் மணிமுடிஎடுத்து ஶ்ரீராமனுக்கு சூட்டிட 
மங்களவாத்யம் முழங்கியெங்கும் மகிழ்சிவெள்ளம் பெருக
ஶ்ரீராமனுக்கு பட்டாபிஷேகம் செய்வோமே ... 

தாயார்களிடம் ஆசிகள்பெற்ற தம்பதிகளைக்கண்டு 
இந்ராதிதேவர்களும் மாமுனிவர்கள் மன்னர்கள்யாவரும் 
இருகரம் கூப்பி வணங்கி சீதாராமன்வாழ்க என்று 
சிரம்தனை தாழ்த்தி வணங்கி சிந்தை குளிர நின்றனறாம் 
ஶ்ரீராமனுக்கு பட்டாபிஷேகம் செய்வோமே ... 

ஶ்ரீராமனுக்கு பட்டாபிஷேகம் செய்வோமே - எங்கள் 
சீதாராமனுக்கு பட்டாபிஷேகம் செய்வோமே

மங்களம்:
அயோத்தியில் உதித்த ஆனந்தராமனுக்கு - கோசலைபெற்ற கோதண்டராமனுக்கு 
ஜானகியை மணந்த ஜானகிராமனுக்கு - மாருதி சேவித மங்களராமனுக்கு 
ராவணனை அழித்த ராஜாராமனுக்கு - பவித்ரமான பட்டாபிராமனுக்கு 
பங்கஜலோசன பரந்தாமனுக்கு - ஜெயமங்களம் நித்ய சுபமங்களம் 

ஜெயமங்களம் நித்ய சர்வமங்களம் - ஜெயமங்களம் நித்ய சுபமங்களம் 
ஜெயமங்களம் நித்ய சர்வமங்களம் - ஜெயமங்களம் நித்ய சுபமங்களம் 

Wednesday, May 16, 2012

ஏன் இந்த களைப்போ

ஏன் இந்த களைப்போ என் அமுதனே
பன்னகசயனா பள்ளிகொண்ட ரங்கா - உமக்கு
காண்போர் நெஞ்சமெல்லாம் பூரித்து நிற்க (உன்னை)
காவிரிகரைதனில் துயில்கின்ற - உமக்கு
திருவடியால் மூவுலகளந்த களைப்போ - நர
சிங்கமாய்வந்து இரண்யனை வதைத்த களைப்போ
சீதையை மணந்திட வில்லைஒடித்த களைப்போ
ராதையுடன் பிருந்தாவனம்தனில் ஆடிய களைப்போ - உமக்கு

திருமலைதேவா தென்பூவக நாதா

(ShivaVishnu Temple of South Florida)

திருமலைதேவா தென்பூவக நாதா 
தேடி வந்தோமே தினமும் உன்னையே - நாங்கள்.. 
பார்புகழ் வேந்தா பக்தவத்ஸலா 
பாடிடுவோமே உன்னை ஆனந்தமாக - நாங்கள்
நாராயணா என்று நாளும் சொல்லியே 
நாடிடுவோமே என்றும் உன்னையே - நாங்கள்
அனைத்தும் நீயே என்று கூவியே 
ஆடிடுவோமே உன்தன் சன்னிதிதனில் - நாங்கள்
உன்னை நம்பினால் எங்கள் குறையெல்லாம் 
ஓடிஒளிந்திடும் என்றறிந்தோமே - நாங்கள்
திருமலை தேவா தென்பூவக நாதா 
தேடிவந்தோமே தினமும் உன்னையே - நாங்கள்

ஆடினாளே ராதை



ஆடினாளே ராதை ...
அழகனுடன் ஆடினாளே ராதை 
மிக ஆனந்தமாகவே ஆடினாளே ராதை
பிருந்தாவனம் தனில் ஆடினாளே ராதை

கோபியர் யாவரும் தாபமுடன் பார்த்திருக்க 
கோலாகலமாகவே அங்கு மாதவனின் கைபிடித்து 
ஆடினாளே ராதை ...

வானோரும் மண்ணோரும் வாழ்த்தி வணங்கிட 
மாயவன் கள்வன் யஸோதை செல்வனுடன் 
ஒய்யாரமாகவே கண்ணனின் கைகோர்த்து 
தாதை தளாங்குதக ததிங்கிண தோம் என்று 
ஆடினாளே ராதை ...

உனக்கு நிகர் உண்டோ ஶ்ரீஉப்பிலியப்பா


உனக்கு நிகர் உண்டோ இப்புவிதனில் ஒப்பில்லா பெருமாளே ஶ்ரீஉப்பிலியப்பா 
மாமுனிக்கு மகளான மங்கைநல்லாள் ஶ்ரீபூமிதேவியை மணந்திட உப்பையும் துறந்த - உனக்கு ...
அடியவர்கள் துன்பம் தனை போக்கிடவே இவ் அகிலம் தனில் வந்து அருமருந்தாய் நிற்கும் 
என்னப்பனே பொன்னப்பனே மணியப்பனே உன் திருவடியே துணை உப்பிலியப்பா - உனக்கு...

என்னவென்று போற்றிடுவேன்

என்னவென்று போற்றிடுவேன் உன் புகழை 
கண்ணனின் நாயகியே கடைக்கண் பாராயோ 

அறிந்தறியாமல் செய்த பிழைதனை பொறுத்து
இவ் அடியவன் என்னிடம் கருணைகாட்டுவாய்தேவி 

விஷ்ணுசித்தர் கண்டெடுத்த வேதத்திருமகளே 
ஶ்ரீவில்லிப்புத்தூரை ஆளும் மாமணியே கோதா 
திருப் பாவை நோன்பிருந்து பள்ளிகொண்டரங்கனை
மணந்த தாயே தயைபுரி சூடிக்கொடுத்தசுடரே 

கந்தா குமரா வடிவேல் அழகா



கந்தா குமரா வடிவேல் அழகா கார்த்திகேயா நமோ நமோ 
முருகா கடம்பா சரவணபவனே மோகனரூபா நமோ நமோ 
வருவாய் மயில் மீதினிலே வேலா வள்ளிமனாளா நமோ நமோ 
பழணிமலை உறை பாலகா பார்வதிசுதனே நமோ நமோ 

ஆனந்தக்கூத்தாடினார்


ஆனந்தக்கூத்தாடினார் ஐயன் நடராஜன் - வெகு 
ஆனந்தமாகவே சிதம்பரம் தனில் - அவர் ஆனந்தக்கூத்தாடினார் ...

தேவர் முனிவர்களுமே திகைத்து நின்றிட 
தில்லை அம்பல திருச்சபைதனிலே - அவர் ஆனந்தக்கூத்தாடினார் ...

அன்னை சிவகாமி அர்த்தபுஷ்டியுடன் பார்த்திட 
அசைந்து அசைந்து ஒய்யாரமாகவே - அவர் 
இப் பாரினில் வந்தெமக்கு அருள் புரிந்திடவே
தாதை தாதை ததிங்கிணதகதோம் - என்று ஆனந்தகூத்தாடினார் ...

அம்மா அம்மா என்று


அம்மா அம்மா என்று ஆதங்கமாய் - நான் 
அழைப்பதை நீ அறியாயோ - உன்னை அம்மா அம்மா என்று ...  


பசியால் வாடிடும் பச்சிளம் சிசுபோல் 
பாராளும் நாயகி அன்னபூரணி - உன்னை அம்மா அம்மா என்று ... 


தீயகுணமதனை அகற்றியே நான் இந்த 
மாய உலகினில் மகிழ்வுடன் வாழ்ந்திட 
தாயாய் நீ இருந்திந்த ஏழை எளிய 
சேய்க்கென்றும் துணைபுரிவாய் தேவி - உன்னை அம்மா அம்மா என்று ... 

Wednesday, April 25, 2012

கிளி ஜோசியம்

கிளி ஜோசியம் பார்க்கும் என்னை கிருக்கன் என்பார். அது மூடநம்பிக்கை என்றும் பலர் கூறுவார்கள். 
ஆவலுடன் நாம் குறி கேட்கும் பொழுதுதான், அந்தக்கிளிக்கு ஒரு நிமிட சுதந்திரமும், அது கொரிப்பதற்கு ஒரு நெல்லும் கிடைக்கிறது என்பதை, நீங்கள் மறந்து விடாதீர்கள். என்றும் உங்களுக்காக காத்திருக்கிறது அந்தக்கிளி. 

முருகனின் பல ரூபங்கள்

முருகன் - அவனுக்குத்தான் எத்தனை ரூபங்கள் 
சிறு குழந்தைகளுக்கு அவன் குமரனாகவும் 
இளைஞர்களுக்கு அவன் சிங்காரவேலனாகவும் 
கலைஞர்களுக்கு அவன் ஸ்கந்தனாகவும் 
வீரர்களுக்கு அவன் வேலாயுதனாகவும் 
இல்லறதோற்கு வள்ளி தேவயானையுடன் சுப்ரமண்யனாகவும் 
உபதேசம் வேண்டுவோர்க்கு சுவாமினாதனாகவும் 
துறவிகளுக்கு அவன் பழணிஆண்டவனாகவும் 
மேலும் பல ரூபங்களில் நமக்கு வழித்துணை வருவான் திருத்தனி முருகன்  

Monday, April 23, 2012

வரலக்ஷ்மி நீ வந்தருள்வாய்


வரலக்ஷ்மி  நீ வந்தருள்வாய் - வந்தெம் இல்லத்தில் தங்கிடுவாய் 
அருளோடு ஆசியும் தந்தடுவாய் - அறியாமை அண்டாமல் செய்திடுவாய் 
இல்லத்தில் ஒளியாய் திகழ்ந்திடுவாய் - இல்லாமை இல்லாமல் செய்திடுவாய் 
கவசமாய் எங்களை காத்திடுவாய் - கருணையே வெள்ளமாய் பொழிந்திடுவாய்          
பரிவோடு  எங்களை பார்த்திடுவாய் - பார் புகழ் கீர்த்தியை தந்திடுவாய் 
வறுமை இல்லா நிலை அளித்திடுவாய் - விளக்கின் சுடறாய் வந்திடுவாய் 
அடியாரை அன்புடன் ஆதரிப்பாய் - ஆசனாய் அறிவுரை தந்திடுவாய் 
வரலக்ஷ்மி  நீ வந்தருள்வாய் - ஶ்ரீவரலக்ஷ்மி நீ வந்தருள்வாய்

வருவாய் வருவாய் வாயுகுமாரா

வருவாய் வருவாய் வாயுகுமாரா
வந்து நற்செய்தியை கூறுவாயே  
வருவாய்.... 
தருவாய் ஆறுதல் தசரத தனயனுக்கு 
தரணியை காத்திடும் சீதாராமனுக்கு 
வருவாய்.... 
அண்டமெல்லாம் அதிர நீ செய்தசெயலை 
அசோகவனம் தனில் நீ கண்டகாட்ஷியை 
கண்டேன் கண்டேன் சீதையை நான் என்று 
களிப்புடன் நீ அந்த ராகவனுக்கு கூறிட 
வருவாய்...

ஓடி ஓடி வா


ஓடி ஓடி வா - ஓடி ஓடி வா - ஓடி ஓடி வா - எங்கள் வீர மணிகண்டா
ஆடி ஆடி வா - ஆடி ஆடி வா - ஆடி ஆடி வா - எங்கள் ஆசை மணிகண்டா
நாடி நாடி வா - நாடி நாடி வா - நாடி நாடி வா - எங்கள் நேச மணிகண்டா
கூடி கூடி வா - கூடி கூடி வா - கூடி கூடி வா - எங்கள் சூர மணிகண்டா  
தேடி தேடி வா - தேடி தேடி வா - தேடி தேடி வா - எங்கள் தீர மணிகண்டா  
பாடி பாடி வா - பாடி பாடி வா - பாடி பாடி வா - எங்கள் பால மணிகண்டா

ஐயனே சரணம் அப்பனே சரணம்

ஐயனே சரணம் அப்பனே சரணம் 
ஹரிஹர சுதனே சரணம் சரணம்
அழகா சரணம் அற்புதா சரணம் 
அன்னதான பிரபு சரணம் சரணம் 
உன்னதா சரணம் உத்தமா சரணம் 
ஓம்காரரூபா சரணம் சரணம் 
சத்குரு சரணம் ஜோதியே சரணம் 
சபரிகிரீஸா சரணம் சரணம் 
சபரிகிரீஸா சரணம் சரணம் 

Friday, April 20, 2012

அலைமகள் கலைமகள் மலைமகள்


அலைமகளே எங்கள் அலைமகளே 
அருளும் பொருளும் தருபவளே 
கலைமகளே எங்கள் கலைமகளே 
கல்வியும் கலையும் தருபவளே 
மலைமகளே எங்கள் மலைமகளே 
வீரமும் தீரமும் தருபவளே 
அலைமகள் கலைமகள் மலைமகளை 
அனுதினம் துதிப்போம் அன்புடனே  

எனக்கருள தருணம் இதம்மா

எனக்கருள தருணம் இதம்மா 
எனதருள் தேவியே சங்கரியே 
எனக்கருள.... 
உன்னையே நினைந்து அனுதினமும் - நான் 
உருகுகிறேனே தயைபுரிவாயே 
எனக்கருள.... 
அன்புடனே உன்தன் சன்நிதியில் வந்து 
அமர்ந்து அர்ச்சனைகள் செய்வேனே 
அகிலமெல்லாம் காப்பவளே தேவி 
அகிலாண்டேஸ்வரியே தாயே 
எனக்கருள....' 

பங்கஜவாஸினி ஶ்ரீசரஸ்வதி

பங்கஜவாஸினி ஶ்ரீசரஸ்வதி - பக்தர்கருளும் ஶ்ரீசரஸ்வதி 
நங்கையர் துதிக்கும் ஶ்ரீசரஸ்வதி - நலங்களை அருளும் ஶ்ரீசரஸ்வதி 
தாமரையில் அமர்ந்த ஶ்ரீசரஸ்வதி - தஞ்சம் அடைந்தோம் ஶ்ரீசரஸ்வதி 
வீணையை ஏந்திய ஶ்ரீசரஸ்வதி - வேண்டும் வரம்தரும் ஶ்ரீசரஸ்வதி 
கல்விக்கு அதிபதியே ஶ்ரீசரஸ்வதி - காத்தருள்வாயே ஶ்ரீசரஸ்வதி                 
மனதார வேண்டினோம் ஶ்ரீசரஸ்வதி - மங்களங்கள் தருவாய் ஶ்ரீசரஸ்வதி 
பங்கஜவாஸினி ஶ்ரீசரஸ்வதி ... சரஸ்வதி ...

Tuesday, April 17, 2012

திருவரங்கத்து ஆனந்தம்


அரங்கம் என்றாலே ஆனந்தமே - திரு 
அரங்கத்தில் காண்பதெல்லாம் பேரின்பமே 
நால்வகை வேதங்கள் ஓதும் அந்தணர்கள் 
நிறைந்த நான்முகனைப்படைத்த ஶீதரன் - பள்ளிகொண்ட 
அரங்கம் என்றாலே ஆனந்தமே... 

அலைஅடித்தோடும் அகண்டகாவிரிகளும் 
கரையில் குலைகள் நிறைந்த இனியவாழைமரங்களும் 
பூஞ்சோலைகளும் பொய்கையில் தாமரையும்நிறைந்து 
நீலவண்ணனான எங்கள் ரங்கன் - பள்ளிகொண்ட 
அரங்கம் என்றாலே ஆனந்தமே... 

வெண்ணைதிருடி உண்ட வடமதுரை கள்வன் நப்   
பின்னையின் மனம் கவர்ந்த மாயவன் அங்கு 
கண்ணை பறிக்கும் பேரழகுடனே கனக மணி
வண்ணனாய் அனந்தன்மேல் - பள்ளிகொண்ட 
அரங்கம் என்றாலே ஆனந்தமே.... 

கூடகோபுரமும் மாடமாளிகையும் நிறைந்து 
குறையில்லா செல்வமுடன் என்றும் விளங்கிடும் 
தும்புரு நாரதரும் இனிய இசைஇசைக்க 
தாய் யஸோதையால் கட்டுண்டதாமோதரன்- பள்ளிகொண்ட 
அரங்கம் என்றாலே ஆனந்தமே ...

ஆனந்தம் ஆனந்தம் பேரானந்தமே

(ShivaVishnu Temple of South Florida)

ஆனந்தம் ஆனந்தம் பேரானந்தமே 
தென்பூவக ஆலயத்தின் அற்புத தரிசனம்
ஆனந்தம் ஆனந்தம்பேரானந்தமே....  
நந்தியையும் கருடரையும் நேர்த்தியுடன்வேண்டி
ஆதிமுதல் கேதுவரைஅனைத்துகிரகமும் சுற்றிவந்தது 
ஆனந்தம் ஆனந்தம் பேரானந்தமே..... 
ஐங்கரனையும் ஐயப்பனையும் மெய்சிலிர்க்க வேண்டி
வள்ளி தேவயானையுடன் வடிவேலனையும் நமஸ்கரித்து 
காஞ்சிபுரநாயகி ஶ்ரீகாமாட்ஷியை வணங்கிவிட்டு 
கலைகளுக்கதிபதியாம் ஶ்ரீசரஸ்வதியின் தாள்பணிந்தது 
ஆனந்தம் ஆனந்தம் பேரானந்தமே.... 
பாற்கடலில் உதித்த ஶ்ரீலஷ்மியை தரிசித்து
சூடிக்கொடுத்தசுடர்கொடி ஶ்ரீஆண்டாளையும்சேவித்து 
பண்டரீ நாதரையும் ஶ்ரீபத்ராஜல ராமரையும் 
அஞ்சாநெஞ்சன் தாஸன் அனுமனையும் வணங்கியது 
ஆனந்தம் ஆனந்தம் பேரானந்தமே..... 
அலங்காரப்பிரியரான ஶ்ரீவெங்கடேசனின் தாள்பணிந்து 
அபிஷேகப்பிரியரான சிவபெருமானையும் துதித்து
கோடி ஜன்ம பாபம் தீர குறையெல்லாம் மறைந்திடவே  
கூடி அர்ச்சனை செய்து நாமும் பாடிமகிழ்ந்திடுவோமே 
ஆனந்தம் ஆனந்தம் பேரானந்தமே.... 

Monday, April 16, 2012

ரம்யமான பெருமாள்

ரம்யமான பெருமாள் எங்கள் ராஜகோபாலத்திருமால் 
ஹரித்திரா நதிக்கரையில் அமைந்த அழகான பொற் கோயிலில் 
மாடுமேய்க்கும் கோலமுடன் நீ மந்தஹாச புன்னகையுமாய் நிற்கும்
ரம்யமான பெருமாள் ...         
காணக்கிடைக்காத கருடசேவையும் கண்ணை பறிக்கும் உன் அலங்காரமும் 
கனவோ - இது என்று நினைக்க கண்படுமோ என்று தோன்றிட 
தட்ஷிண துவாரகைக்கு வந்து நீ தரிசனம் அளிக்கும் எங்கள் 
கோபாலனே - ராஜ கோபாலனே - ஸந்தானகோபாலனே 
உனைக்காண கண்கோடி வேண்டுமப்பா 
ரம்யமான பெருமாள் ...

Friday, April 6, 2012

கூவி அழைப்பாயே

கூவி அழைப்பாயே என் உள்ளம் கவர்ந்த
மாயவன் மறைந்திருக்கும் இடம் நோக்கி - நீ கூவி அழைப்பாயே ...

அழகிய மயில் ஆடும் சோலை தனிலே - மிக
அமுதமாய் இசைபாடும் கரும் குயிலே - நீ கூவி அழைப்பாயே ...

பசும் கிளி நிறமுடைய ஶீதரனின்
பிரிவால் நான் படும் வேதனையை கூறி - நீகூவி அழைப்பாயே ...

மெல்லிய நடை போட்டு அன்னங்கள் அசைந்தாடும் - ஶ்ரீ
வில்லிப்புத் தூருக்கவரை வரச்சொல்லி - நீ கூவி அழைப்பாயே...

திருவரங்கத்தில் நான் கண்டேன்

கண்டேன் கண்டேன் காணக்கிடைக்காத கருணை வள்ளலை திருவரங்கத்தில் - நான் 
அடியாரின் மனமதில் அமுதமாய் இனித்திடும் அந்த ரங்கன் பள்ளிகொண்ட கோலத்தை - நான் 
கண்டேன் கண்டேன்.. 
பூலோக வைகுண்டமான புண்ணிய பூமியில் மாலோலன் அந்த வடமதுரை மாயவன் 
மன்மத ரூபனாய் காட்ஷி அளிக்கும் அழகில் மயங்கியே என்தன் கவலையை மறந்து - நான் 
கண்டேன் கண்டேன் ...

அரஹரோஹரா

சிவகாமி பாலனுக்கு அரஹரோஹரா 
சிங்கார வேலனுக்கு அரஹரோஹரா 
மகேசன் மைந்தனுக்கு அரஹரோஹரா 
மன்மத ரூபனுக்கு அரஹரோஹரா 
அறுபடை முருகனுக்கு அரஹரோஹர 
ஆறுமுக வேலனுக்கு அரஹரோஹரா 
குரவள்ளி நாதனுக்லகு அரஹரோஹரா 
சூரசம்ஹாரனுக்கு அரஹரோஹரா 
அரஹரோஹரா அரஹரோஹரா
அரஹரோஹரா அரஹரோஹரா

Tuesday, April 3, 2012

மால்மருகா

வேலோடும் மயிலோடும் விளையாடும் மால்மருகா 
வில்லொத்த கண்ணழகா குரவள்ளி மனவாளா 
வேலோடும் மயிலோடும் ...

அழகனாய் குமரனாய் சிங்கார வேலனாய் 
அன்னை அபிராமிமகிழ் பாலசுப்ரமண்யனாய் 
வேலோடும் மயிலோடும் ... 

அறுபடை வீடுதனில் ஆனந்தமாய் நின்று கொண்டு 
அன்பர்கபயம் அளித்திடும் ஆறுமுக தெய்வமுமாய் 
சேவற்கொடியோனாய் சோலைமலை குமரனுமாய் 
கார்த்திகேயனாய் கலியுக வரதனுமாய் நின்று
வேலோடும் மயிலோடும் ...

Monday, April 2, 2012

எங்கும் இருப்பான் கண்ணன்

அன்பு நிறைந்த உள்ளத்தில் நீ இருப்பாய் கண்ணா  
அமைதி தரும் எண்ணத்தில் நீ இருப்பாய்        


கனவில் வரும் முகத்தில் நீ இருப்பாய்  கண்ணா  
காற்றில் வரும் கீதத்தில் நீ இருப்பாய்           


மனதில் வரும் நினைவில் நீ இருப்பாய்  கண்ணா  
மாறி வரும் காலத்திலும் நீ  இருப்பாய்        
ஒன்றும் அறியாகுழந்தை போல் நீ இருப்பாய் கண்ணா 
என்றும் எங்கள் உள்ளத்தில் நீ இருப்பாய்  

ஶ்ரீராமதாஸனை சிந்தனை செய்திடுவாய்

சிந்தனை செய்திடுவாய் மனமே - ஶ்ரீராமதாஸனை 
வந்திடும் சங்கடங்கள் விலகிடவே - என்றும் நீ
சிந்தனை செய்திடுவாய் ...

தஞ்சம் அடைந்தோரை வஞ்சனையின்றி காக்கும் 
அஞ்சனை மைந்தனை என்றும் மறவாமல் நீ 
சிந்தனை செய்திடுவாய் ...

ஆதவனை கனியென்று நினைத்து பிடிக்கசென்ற 
ஆஜானுபாவன் அந்த அற்புத குணசீலன் 
சஞ்சீவி மலையை சாகசமாகவே தூக்கிய 
சிரஞ்சீவியான கேசரி நன்தனை மனதில் நீ 
சிந்தனை செய்திடுவாய் ...

சரஸ்வதி சாம்பவி

சரஸ்வதி சாம்பவி சந்திரவதனி சுந்தரி சாகரீ சரணம் அம்மா - வாணி 
(சரஸ்வதி ...)
வெள்ளைதாமரையில் அமர்ந்த தேவி சொல்லை செயலாக்கும் அற்புதத்தை தா 
(சரஸ்வதி ...)
கல்லும்கனிந்துறுக எனக்கு கவி பாடும் திறன் தறுவாயே தேவி 
வீணை ஒலிக்கு ஆதாரமானவளே வித்யாதாரிணியே வாணி 
சிந்தைதனில் நின்று எங்கள் சித்தம் தெளிவாக்கு வாயே வேணி 
முந்தைபிறவி துயர்களையெல்லாம் நீ முற்றும் போக்குவாய் தாயே 
(சரஸ்வதி ...)

Friday, March 23, 2012

மங்களமூர்த்தி

ஜய ஜய தேவா மங்களமூர்த்தி கௌரிபுத்ரா நமோ நமோ       
ஜய ஜய தேவா வக்ரதுண்டா சங்கரபாலா   நமோ நமோ       
ஜய ஜய தேவா மோதகப்பிரியா ராகவன்மருகா நமோ நமோ   
ஜய ஜய தேவா லம்போதரா வேலவன்சோதரா நமோ நமோ 
ஜய ஜய தேவா கஜவதனா விக்னவிநாயக நமோ நமோ           
விக்னவிநாயக நமோ நமோ விக்னவிநாயக நமோ நமோ

பிழைக்கத்தெரிந்தவன்

இரண்டு வழிப்போக்கர்கள் காட்டுவழியே  போய்கொண்டிருந்தனர். ஒரு இடத்தில் புலி உருமும் சப்தம் கேட்டது. இருவரும் ஓடத்தயாராக வேண்டும், என்று எச்சரித்த ஒருவன், ஓடத்தயாரானான். மற்றவனோ 'ஏ முட்டாளே, புலியை விட வேகமாக நம்மால் ஓடமுடியுமா'? அதன்திறமை  நமக்கேது என்றான். முதலாமவன், 'உண்மை தான். புலியைவிட வேகமாக ஓடாவிட்டாலும், உன்னை விட வேகமாக நான் ஓடினால் நான் பிழைத்துக்கொள்வேன் அல்லவா', என்று கூறி ஓட ஆரம்பித்தான். 
திறமை இல்லாவிட்டாலும் சாமர்த்தியம் உள்ளவன் பிழைத்துக்கொள்வான்.

Tuesday, March 20, 2012

யாருக்கு மாலை இடுவாள் பார்க்கடல் பெற்ற பைங்கிளி


யாருக்கு நீ மாலை இடுவாய் ஶ்ரீ மஹாலக்ஷ்மி
பாற்கடல் வேந்தனின் பைங்கிளியே
அயோத்யாபுரியை ஆளும் அந்த கோசலை மைந்தன் ஶ்ரீ ராஜாராமனுக்கா
மதுராபுரியில் வளர்ந்த மாயவன் மதுரக்குழலூதும்  ஶ்ரீ முரளீ மாதவனுக்கா
யாருக்கு நீ மாலை இடுவாய் ....
பூலோக வைகுண்டமாய்  திகழும் ஶ்ரீரங்கமதில் பன்னக சயனனான ஶ்ரீ ரங்கராஜனுக்கா
திருமலைக்கு வந்து திவ்ய தரிசனம் தரும் திருமால் ஏகாந்தன் ஶ்ரீ வேங்கடேசனுக்கா
யாருக்கு நீ மாலை இடுவாய் ....
ஜகன்னாத்புரியில் நின்று பூரிக்கவைக்கும் ஜகத் ரக்ஷகன் ஶ்ரீ ஜகன்நாதனுக்கா
பத்ராசலமதில்  பக்தனுக்கு அருளவே வந்த பரந்தாமனான ஶ்ரீ கோதண்ட ராமனுக்கா
யாருக்கு நீ மாலை இடுவாய் ....
குருவாயூரில் குழந்தை போல் வந்தெங்கள் குறைகளை தீர்த்து வைக்கும் ஶ்ரீ கோவிந்தனுக்கா
தட்ஷிணத்வாரகையில்  உற்சாகமாய் நிற்கும் தர்மசீலன் எங்கள் ஶ்ரீ ராஜகோபாலனுக்கா
யாருக்கு நீ மாலை இடுவாய் ....
திருக்குடந்தை க்ஷேத்ரமதில் வந்து பரிபாலனம் செய்யும் ஶ்ரீ சாரங்கபாணி b  க்கா
மூவுலகும் காத்தருளும் திருமால் ஆயிரம் நாமம் உடைய ஶ்ரீமன்  நாராயணனுக்கா  
யாருக்கு நீ மாலை இடுவாய் ....



Friday, March 16, 2012

மூலாதார மூர்த்தியே சரணம்



மூலாதார மூர்தியே முக்கண்ணன் மைந்தனே
கார்திகேயன் ஸோதரனே கருணை வடிவானவனே
மாங்கனியை வென்றவனே மாசுமரு அற்றவனே
மோதக பிரியனே மோஹனமானவனே
யானை முகத்தானே யாவரையும் காத்தருள்வாய்
நாயகனே ... விநாயகனே ... ஸித்திவிநாயகனே
சரணம் சரணம் சரணம்
சரணம் சரணம் சரணம்

Wednesday, March 14, 2012

இராமாயண மஹிமையின் கதை சுருக்கம்

ஶ்ரீராமஜயம் ஶ்ரீராமஜயம் ஶ்ரீராமஜயம் ஶ்ரீராமஜயம் ஶ்ரீராமஜயம் ஶ்ரீராமஜயம் 
ஶ்ரீராமஜயம் ஶ்ரீராமஜயம் ஶ்ரீராமஜயம் ஶ்ரீராமஜயம் ஶ்ரீராமஜயம் ஶ்ரீராமஜயம் 

தசரத மஹாராஜா செய்த யாகத்தின் பலனாய் அன்னை கோசலையின் மணிவயிற்றில் உதித்து,
ரகுகுலத்திற்கு பெருமை அளித்து,
வில்வித்தை வா ள்வித்தையில் தேர்ந்து,
விஶ்வாமித்ர முனிவரின் யாகத்தை காத்து நின்று,
அகலிகைக்கு சாபவிமோசனமளித்து,
ஜனக நகர் சென்று,
சிவ தனுசை வளைத்தொடித்து,
நங்கை சீதையை கை பற்றி,
சிற்றன்னை கைகேயின் ஆணையால் மரவுரி மான்தோல் தரித்து,
மனையாள் சீதை சகோதரன் லக்ஷ்மணுடன் கானகம் சென்று,
குஹனின் அன்பான உதவியால் கங்கையை கடந்து,
சித்திரகூடம்தனில் தங்கி,
பரதனுக்கு பாதுகையை அளித்து,
ராஜ்யத்தை ஆளச்செய்து,
அகஸ்தியரை தரிசித்து,
பஞ்சவடி சென்று,
அங்கு வந்த அரக்கி சூர்பணகையின் மூக்கை அறுக்கவைத்து,
மாய மானான மாரீசனை கொன்று,
சீதையை பிறிந்து மனம் தளர்ந்து,
ஜடாயு செய்த உதவிக்கு நன்றி கூறி அதற்கு மோக்ஷம் அளித்து,
ஸபரியை ஆசிர்வதித்து,
அனுமனைக் கண்டு,
சுக்ரீவனுடன் நட்பு கொண்டு,
வாலியை வதைத்து,
அனுமனுக்கு அனுக்ரஹ பலமளித்து,
விளையாட்டாக கடலை தாண்ட செய்து,
அஸோக வனம்தனில் அமர்ந்துருந்த சீதையிடம் கனையாழியை கொடுக்கவைத்து,
ராவணனை கண்டு லங்கைக்கு தீயிட்டு வந்த அனுமனிடமிருந்து,
சீதை கொடுத்தனுப்பிய சூடாமணியை பெற்றுகொண்டு,
அலைகடலில் அணைகட்டி பரிவாரங்க ளுடன் லங்கை சென்று,
ராவணனை வென்று வதைத்து,
விபீஷணனுக்கு பட்டாபிஷேகம் செய்துவிட்டு,
அன்பு சீதைக்கு அக்னிதேவனின் ஆசியை பெற்று கொடுத்து,
ஆருயிர் சீதை ஆசை லக்ஷ்மண் தாசன் அனுமனுடன் நந்திக்ராமம் சென்று,
அங்கு காத்திருந்த பரதனை அணைத்துகொண்டு,
யாவரும் அயோத்தி திரும்பி,
அங்கு கூடியிருந்த ஜனங்களுக்கு ஆசிகள் வழங்கிவிட்டு,
அன்பு தாயார்களின் பொற்பாதங்களில் தலை வைத்து வணங்கி,
அனுமன் தாங்கிய அரியணையில் அமர்ந்து,
மணிமகுடம் ஏற்றுகொண்ட
மஹானுபாவன் ஶ்ரீராமபிரானை
நான் தாளும் தடக்கையும் கூப்பி வணங்கி பஜிக்கிறேன். 
ஶ்ரீ ராம் ஜய ராம் ஜய ஜய ராம் ஶ்ரீ ராம் ஜய ராம் ஸீதா ராம் ஶ்ரீ ராம் ஜய ராம் ஜய ஜய ராம் ஶ்ரீ ராம் ஜய ராம் ஸீதா ராம்