Thursday, July 12, 2012

என் அருமை செல்வனே கண்ணா





என் அருமை செல்வனே இன்னமுதே கண்ணா நீ 
வெண்ணெய் திருட சென்றாயோ வேரெங்குசென்றாயோ 


வெண்ணெய் திருடி தின்னும் இன்பம் வேரெதிலும் இல்லை அம்மா 
என்னை என்ன செய்யுமுடியும் எப்படியும் நான் தப்பிடுவேன் 


கண்மணி நான் உனக்கு கை நிறைய வெண்ணெய் தருவேன் 
ஏன் இந்த பொல்லாப்பு யாரிடம் நான் முறையிடுவேன் 


நீ கொடுக்கும் வெண்ணெய் எனக்கு தேனாய் இனிக்கும் அம்மா 
நான் திருடி தின்னும் வெண்ணெயில் மர்மம் பல இருக்குதம்மா 


அடுத்தவீட்டு ஆய்ச்சியிடம் அடிவாங்கி வந்தாயோ நீ 
பக்கத்து வீட்டு பாட்டியின் பழிச்சொல்லை கேட்டாயோ 


அடிவாங்க நான் என்ன அறியாதவனா அம்மா 
தடி எடுக்குமுன் தானும் ஓடி ஒளிந்திடுவேன் தாயே 


பேதை நான் என்ன செய்வேன் பெற்றமனம் பதைபதைக்க 
காதை பொற்றி கொண்டு நானும் எத்தனை நாள் இருந்திடுவேன் 


ஏன் இந்த கவலை அம்மா என்னை உனக்கு தெரியாதா 
நான்தான் அந்த கள்வன் என்று நாலு பேரிடம் எடுத்து சொல்வேன்

என் அருமை செல்வனே இன்னமுதே கண்ணா நீ 
வெண்ணெய் திருட சென்றாயோ வேரெங்குசென்றாயோ 

No comments:

Post a Comment