என் அருமை செல்வனே இன்னமுதே கண்ணா நீ
வெண்ணெய் திருட சென்றாயோ வேரெங்குசென்றாயோ
வெண்ணெய் திருடி தின்னும் இன்பம் வேரெதிலும் இல்லை அம்மா
என்னை என்ன செய்யுமுடியும் எப்படியும் நான் தப்பிடுவேன்
கண்மணி நான் உனக்கு கை நிறைய வெண்ணெய் தருவேன்
ஏன் இந்த பொல்லாப்பு யாரிடம் நான் முறையிடுவேன்
நீ கொடுக்கும் வெண்ணெய் எனக்கு தேனாய் இனிக்கும் அம்மா
நான் திருடி தின்னும் வெண்ணெயில் மர்மம் பல இருக்குதம்மா
அடுத்தவீட்டு ஆய்ச்சியிடம் அடிவாங்கி வந்தாயோ நீ
பக்கத்து வீட்டு பாட்டியின் பழிச்சொல்லை கேட்டாயோ
அடிவாங்க நான் என்ன அறியாதவனா அம்மா
தடி எடுக்குமுன் தானும் ஓடி ஒளிந்திடுவேன் தாயே
பேதை நான் என்ன செய்வேன் பெற்றமனம் பதைபதைக்க
காதை பொற்றி கொண்டு நானும் எத்தனை நாள் இருந்திடுவேன்
ஏன் இந்த கவலை அம்மா என்னை உனக்கு தெரியாதா
நான்தான் அந்த கள்வன் என்று நாலு பேரிடம் எடுத்து சொல்வேன்
என் அருமை செல்வனே இன்னமுதே கண்ணா நீ
வெண்ணெய் திருட சென்றாயோ வேரெங்குசென்றாயோ
No comments:
Post a Comment