Friday, July 13, 2012
Thursday, July 12, 2012
சரணம் கணேசா
சம்புகுமாரா சரணம் கணேசா ஜெய
சங்கரிபாலா சரணம் கணேசா
மூலாதார சரணம் கணேசா
மூஷிகவாகனா சரணம் கணேசா
ஏகதந்தா சரணம் கணேசா
லம்போதரா சரணம் கணேசா
சம்புகுமாரா சரணம் கணேசா ஜெய
சங்கரிபாலா சரணம் கணேசா
கஜவதனா சரணம் கணேசா
கருணாசாகரா சரணம் கணேசா
வக்ரதுண்டா சரணம் கணேசா
வரப்பிரஸாதி சரணம் கணேசா
சம்புகுமாரா சரணம் கணேசா ஜெய
சங்கரிபாலா சரணம் கணேசா சங்கரிபாலா சரணம் கணேசா சங்கரிபாலா சரணம் கணேசா
என் அருமை செல்வனே கண்ணா
என் அருமை செல்வனே இன்னமுதே கண்ணா நீ
வெண்ணெய் திருட சென்றாயோ வேரெங்குசென்றாயோ
வெண்ணெய் திருடி தின்னும் இன்பம் வேரெதிலும் இல்லை அம்மா
என்னை என்ன செய்யுமுடியும் எப்படியும் நான் தப்பிடுவேன்
கண்மணி நான் உனக்கு கை நிறைய வெண்ணெய் தருவேன்
ஏன் இந்த பொல்லாப்பு யாரிடம் நான் முறையிடுவேன்
நீ கொடுக்கும் வெண்ணெய் எனக்கு தேனாய் இனிக்கும் அம்மா
நான் திருடி தின்னும் வெண்ணெயில் மர்மம் பல இருக்குதம்மா
அடுத்தவீட்டு ஆய்ச்சியிடம் அடிவாங்கி வந்தாயோ நீ
பக்கத்து வீட்டு பாட்டியின் பழிச்சொல்லை கேட்டாயோ
அடிவாங்க நான் என்ன அறியாதவனா அம்மா
தடி எடுக்குமுன் தானும் ஓடி ஒளிந்திடுவேன் தாயே
பேதை நான் என்ன செய்வேன் பெற்றமனம் பதைபதைக்க
காதை பொற்றி கொண்டு நானும் எத்தனை நாள் இருந்திடுவேன்
ஏன் இந்த கவலை அம்மா என்னை உனக்கு தெரியாதா
நான்தான் அந்த கள்வன் என்று நாலு பேரிடம் எடுத்து சொல்வேன்
என் அருமை செல்வனே இன்னமுதே கண்ணா நீ
வெண்ணெய் திருட சென்றாயோ வேரெங்குசென்றாயோ
எத்தனை இன்பங்களை
நீரும் நிலம் நெருப்பும் அதனுடன் வான் வாயுவும் இன்னும் பலவும்
எமக்களித்து இன்னலற்ற வாழ்வையும் கொடுத்திட்ட
தன்நிகரில்லாத இறைவா உத்தமா உன்தன்னை
நான் என்னவென்றுபுகழ்ந்துபாடிடுவேன் ஐயா
எத்தனை எத்தனை இன்பங்களோ இவ்வையமதில்
அத்தனையும் பேர் இன்பமயமே இறைவன் நமக்களித்த (எத்தனை)
ஆதவன் உதிப்பது தினம்தினம் இன்பம் அந்த
அலைகடலும் மலையும் கண்டுகளிப்பது இன்பமே (எத்தனை)
பசுமையான பலமரங்களும் புல்லினமும் இன்பம்
பரந்திருக்கும் இந்த பேருலகமும் இன்பமே (எத்தனை)
அழகாய் சிரிக்கும் மழலையின் குரல் இன்பம்
அனுதினமும்மலரும் அந்த பூக்களும் இன்பமே (எத்தனை)
ஆவினங்கள் அசைந்து ஆடிவருவது இன்பம்
ஆடிடும் மயில்களும் கூவிடும் குயிலினமும் இன்பமே (எத்தனை)
வண்ணமயமாய் தோன்றும் வானவில்லும் இன்பம்
வண்டினங்களின் அந்த ரீங்காரமும் இன்பமே (எத்தனை)
மண்ணில் பேரின்பமுடன் நாம் வாழ்ந்திடவே
எண்ணில் அடங்காத எத்தனை இன்பங்கள்
இன்னும் பல இன்பங்களை எமக்களித்த இறைவா
என்றும் உன்னை பரவசமாய் பாடுதல் பேரின்பமே (எத்தனை)
எமக்களித்து இன்னலற்ற வாழ்வையும் கொடுத்திட்ட
தன்நிகரில்லாத இறைவா உத்தமா உன்தன்னை
நான் என்னவென்றுபுகழ்ந்துபாடிடுவேன் ஐயா
எத்தனை எத்தனை இன்பங்களோ இவ்வையமதில்
அத்தனையும் பேர் இன்பமயமே இறைவன் நமக்களித்த (எத்தனை)
ஆதவன் உதிப்பது தினம்தினம் இன்பம் அந்த
அலைகடலும் மலையும் கண்டுகளிப்பது இன்பமே (எத்தனை)
பசுமையான பலமரங்களும் புல்லினமும் இன்பம்
பரந்திருக்கும் இந்த பேருலகமும் இன்பமே (எத்தனை)
அழகாய் சிரிக்கும் மழலையின் குரல் இன்பம்
அனுதினமும்மலரும் அந்த பூக்களும் இன்பமே (எத்தனை)
ஆவினங்கள் அசைந்து ஆடிவருவது இன்பம்
ஆடிடும் மயில்களும் கூவிடும் குயிலினமும் இன்பமே (எத்தனை)
வண்ணமயமாய் தோன்றும் வானவில்லும் இன்பம்
வண்டினங்களின் அந்த ரீங்காரமும் இன்பமே (எத்தனை)
மண்ணில் பேரின்பமுடன் நாம் வாழ்ந்திடவே
எண்ணில் அடங்காத எத்தனை இன்பங்கள்
இன்னும் பல இன்பங்களை எமக்களித்த இறைவா
என்றும் உன்னை பரவசமாய் பாடுதல் பேரின்பமே (எத்தனை)
Subscribe to:
Posts (Atom)