Monday, August 27, 2012

குருவாயூர்தனில் நின்றே பாலகிருஷ்ணன்



குருவாயூர்தனில் நின்றே பாலகிருஷ்ணன்
குறையின்றி நமை காப்பான் பாலகிருஷ்ணன் 
கோகுலத்தில் வளர்ந்தவனாம் பாலகிருஷ்ணன்
கோலமயில் சிறகணிந்த பாலகிருஷ்ணன்
கோடிசூர்ய பிரகாசனாய் பாலகிருஷ்ணன்
கோலாகலமாய் காட்ஷி அளிக்கும் பாலகிருஷ்ணன்
குருவாயூர்தனில் நின்றே பாலகிருஷ்ணன் 
குறையின்றி நமை காப்பான் பாலகிருஷ்ணன் 
கோமாதாவை மேய்த்தவனாம் பாலகிருஷ்ணன் 
கோவர்தனம் தூக்கி காத்த பாலகிருஷ்ணன் 
கோபியரின் நேயனாம் அந்த பாலகிருஷ்ணன் 
கோதை மனாளனான பாலகிருஷ்ணன் 
குருவாயூர்தனில் நின்றே பாலகிருஷ்ணன் 
குறையின்றி நமை காப்பான் பாலகிருஷ்ணன் 
பாலகிருஷ்ணன் 
எங்கள் கோபாலகிருஷ்ணன் 
எங்கள் கோபாலகிருஷ்ணன்

No comments:

Post a Comment