Friday, March 23, 2012

பிழைக்கத்தெரிந்தவன்

இரண்டு வழிப்போக்கர்கள் காட்டுவழியே  போய்கொண்டிருந்தனர். ஒரு இடத்தில் புலி உருமும் சப்தம் கேட்டது. இருவரும் ஓடத்தயாராக வேண்டும், என்று எச்சரித்த ஒருவன், ஓடத்தயாரானான். மற்றவனோ 'ஏ முட்டாளே, புலியை விட வேகமாக நம்மால் ஓடமுடியுமா'? அதன்திறமை  நமக்கேது என்றான். முதலாமவன், 'உண்மை தான். புலியைவிட வேகமாக ஓடாவிட்டாலும், உன்னை விட வேகமாக நான் ஓடினால் நான் பிழைத்துக்கொள்வேன் அல்லவா', என்று கூறி ஓட ஆரம்பித்தான். 
திறமை இல்லாவிட்டாலும் சாமர்த்தியம் உள்ளவன் பிழைத்துக்கொள்வான்.

No comments:

Post a Comment