Monday, April 16, 2012

ரம்யமான பெருமாள்

ரம்யமான பெருமாள் எங்கள் ராஜகோபாலத்திருமால் 
ஹரித்திரா நதிக்கரையில் அமைந்த அழகான பொற் கோயிலில் 
மாடுமேய்க்கும் கோலமுடன் நீ மந்தஹாச புன்னகையுமாய் நிற்கும்
ரம்யமான பெருமாள் ...         
காணக்கிடைக்காத கருடசேவையும் கண்ணை பறிக்கும் உன் அலங்காரமும் 
கனவோ - இது என்று நினைக்க கண்படுமோ என்று தோன்றிட 
தட்ஷிண துவாரகைக்கு வந்து நீ தரிசனம் அளிக்கும் எங்கள் 
கோபாலனே - ராஜ கோபாலனே - ஸந்தானகோபாலனே 
உனைக்காண கண்கோடி வேண்டுமப்பா 
ரம்யமான பெருமாள் ...

No comments:

Post a Comment