Monday, April 23, 2012

வருவாய் வருவாய் வாயுகுமாரா

வருவாய் வருவாய் வாயுகுமாரா
வந்து நற்செய்தியை கூறுவாயே  
வருவாய்.... 
தருவாய் ஆறுதல் தசரத தனயனுக்கு 
தரணியை காத்திடும் சீதாராமனுக்கு 
வருவாய்.... 
அண்டமெல்லாம் அதிர நீ செய்தசெயலை 
அசோகவனம் தனில் நீ கண்டகாட்ஷியை 
கண்டேன் கண்டேன் சீதையை நான் என்று 
களிப்புடன் நீ அந்த ராகவனுக்கு கூறிட 
வருவாய்...

No comments:

Post a Comment