Monday, April 2, 2012

சரஸ்வதி சாம்பவி

சரஸ்வதி சாம்பவி சந்திரவதனி சுந்தரி சாகரீ சரணம் அம்மா - வாணி 
(சரஸ்வதி ...)
வெள்ளைதாமரையில் அமர்ந்த தேவி சொல்லை செயலாக்கும் அற்புதத்தை தா 
(சரஸ்வதி ...)
கல்லும்கனிந்துறுக எனக்கு கவி பாடும் திறன் தறுவாயே தேவி 
வீணை ஒலிக்கு ஆதாரமானவளே வித்யாதாரிணியே வாணி 
சிந்தைதனில் நின்று எங்கள் சித்தம் தெளிவாக்கு வாயே வேணி 
முந்தைபிறவி துயர்களையெல்லாம் நீ முற்றும் போக்குவாய் தாயே 
(சரஸ்வதி ...)

No comments:

Post a Comment