Tuesday, April 3, 2012

மால்மருகா

வேலோடும் மயிலோடும் விளையாடும் மால்மருகா 
வில்லொத்த கண்ணழகா குரவள்ளி மனவாளா 
வேலோடும் மயிலோடும் ...

அழகனாய் குமரனாய் சிங்கார வேலனாய் 
அன்னை அபிராமிமகிழ் பாலசுப்ரமண்யனாய் 
வேலோடும் மயிலோடும் ... 

அறுபடை வீடுதனில் ஆனந்தமாய் நின்று கொண்டு 
அன்பர்கபயம் அளித்திடும் ஆறுமுக தெய்வமுமாய் 
சேவற்கொடியோனாய் சோலைமலை குமரனுமாய் 
கார்த்திகேயனாய் கலியுக வரதனுமாய் நின்று
வேலோடும் மயிலோடும் ...

No comments:

Post a Comment