Monday, April 23, 2012

வரலக்ஷ்மி நீ வந்தருள்வாய்


வரலக்ஷ்மி  நீ வந்தருள்வாய் - வந்தெம் இல்லத்தில் தங்கிடுவாய் 
அருளோடு ஆசியும் தந்தடுவாய் - அறியாமை அண்டாமல் செய்திடுவாய் 
இல்லத்தில் ஒளியாய் திகழ்ந்திடுவாய் - இல்லாமை இல்லாமல் செய்திடுவாய் 
கவசமாய் எங்களை காத்திடுவாய் - கருணையே வெள்ளமாய் பொழிந்திடுவாய்          
பரிவோடு  எங்களை பார்த்திடுவாய் - பார் புகழ் கீர்த்தியை தந்திடுவாய் 
வறுமை இல்லா நிலை அளித்திடுவாய் - விளக்கின் சுடறாய் வந்திடுவாய் 
அடியாரை அன்புடன் ஆதரிப்பாய் - ஆசனாய் அறிவுரை தந்திடுவாய் 
வரலக்ஷ்மி  நீ வந்தருள்வாய் - ஶ்ரீவரலக்ஷ்மி நீ வந்தருள்வாய்

No comments:

Post a Comment