Wednesday, May 16, 2012

அம்மா அம்மா என்று


அம்மா அம்மா என்று ஆதங்கமாய் - நான் 
அழைப்பதை நீ அறியாயோ - உன்னை அம்மா அம்மா என்று ...  


பசியால் வாடிடும் பச்சிளம் சிசுபோல் 
பாராளும் நாயகி அன்னபூரணி - உன்னை அம்மா அம்மா என்று ... 


தீயகுணமதனை அகற்றியே நான் இந்த 
மாய உலகினில் மகிழ்வுடன் வாழ்ந்திட 
தாயாய் நீ இருந்திந்த ஏழை எளிய 
சேய்க்கென்றும் துணைபுரிவாய் தேவி - உன்னை அம்மா அம்மா என்று ... 

No comments:

Post a Comment