Wednesday, May 16, 2012

ஏன் இந்த களைப்போ

ஏன் இந்த களைப்போ என் அமுதனே
பன்னகசயனா பள்ளிகொண்ட ரங்கா - உமக்கு
காண்போர் நெஞ்சமெல்லாம் பூரித்து நிற்க (உன்னை)
காவிரிகரைதனில் துயில்கின்ற - உமக்கு
திருவடியால் மூவுலகளந்த களைப்போ - நர
சிங்கமாய்வந்து இரண்யனை வதைத்த களைப்போ
சீதையை மணந்திட வில்லைஒடித்த களைப்போ
ராதையுடன் பிருந்தாவனம்தனில் ஆடிய களைப்போ - உமக்கு

No comments:

Post a Comment