Wednesday, May 23, 2012

என்ன புண்ணியம் செய்தாயோ பாற்கடலே

என்ன புண்ணியம் செய்தாயோ பாற்கடலே 
கண்ணன்வந்து அங்கு பள்ளிகொள்ளவே - நீ 

ஆலந்தளிரில் கண் வளர்ந்த ஆராவமுதன் 
அலைகடலான உன்மேல் ஆசையாய் பள்ளிகொள்ள 
என்ன புண்ணியம்.... 

மாவலியிடம்சென்று பூமியை யாஜித்துப்பெற்று 
மாசற்ற சீதையைகாக்க ராவணனைகொன்ற அந்த 
இடைப்பிள்ளையான துவாரகைசெல்வனவன் 
ஈரேழு புவனமாளும் கோவிந்தன் பள்ளிகொள்ள 
என்னபுண்ணியம்....

No comments:

Post a Comment