Wednesday, February 5, 2014

கண்ணா நடனம் ஆடினாயே

ஆனந்தமாய் நடனம் ஆடினாயே கண்ணா 
காளிங்கன் மேல் உன்பொற்பாதத்தை பதித்து (வெகு) 
ஆனந்தமாய் நடனம் ஆடினாயே கண்ணா       

கண்ணா மணிவண்ணா என்றலரிய அடியவன் 
கஜேந்திரனுக்கருளிய கார்வண்ணா (நீ வெகு)
ஆனந்தமாய்  நடனம் ஆடினாயே கண்ணா                                                            

உலகையே உண்டும் பசி தீராமல் - நீ 
வெண்ணையையும் திருடி உண்டாயே
என் மனம் அறியாயோ மன்மதனே 
உன்தன் எண்ணம்தான் என்னவோ அறியேனே 
ஆனந்தமாய் நடனம் ஆடினாயே  கண்ணா

2 comments: