Friday, February 14, 2014

பூலோக வைகுண்டம்

மனதிற்குகந்தது மாதவன் அவதரித்த வடமதுரையா
இன்னமுதன் அந்த மாயவன் வளர்ந்த கோகுலமா
ஆயர்களுடன் அழகன் மாடுமேய்த்த ஆயர்பாடியா
ராதையுடன்கண்ணன் ஆடிய பிருந்தாவனமா
குழந்தையாய் கொஞ்சி விளையாடும் குருபவனமா
கோபாலனாய் காட்ஷி அளிக்கும் தட்க்ஷிண துவாரகையா
தீனதயாளனாய் திவ்ய தரிசனம் தரும் திருமலையா
ஆனந்தமாய் அந்த ரங்கன் பள்ளிகொண்ட திருஅரங்கமா
மாலோலனின் கடைக்கண்  பார்வைபட்டால் - எங்குமே
பூலோக வைகுண்டமே! என்றுமே பூலோக வைகுண்டமே!  

No comments:

Post a Comment