Friday, February 21, 2014

சாரங்கனா சண்முகனா

பக்தி ரசமுடனும் உள்ளன்புடனும் பரவசமுடனும் நாம் தரிசனம் செய்வது              

பச்சைமாமலை மேனியன் சாரங்கனையா - படை வீடு  கொண்ட பாலன் சண்முகனையா
கோபியருடன்குலாவிய கோபாலனையா - கோலமயில் வாகன சரவணனையா                        

குன்றை குடையாய் எடுத்த கிரிதரனையா - குன்றுதோர் ஆடிடும் அந்த குமரனையா
விந்தை பல காட்டிய தாமோதரனையா - தந்தைக்குபதேசம் செய்த ஸ்கந்தனையா

பக்தி ரசமுடனும் உள்ளன்புடனும் பரவசமுடனும் நாம் தரிசிப்பது
நம் இரு கண்களாய் ஆன சாரங்கராஜனையும் சண்முகநாதனையுமே!       

No comments:

Post a Comment