Friday, February 14, 2014

அல்லிக்கேணி மன்னன்

அல்லிக்கேணியை அரசாளும் மன்னவன்
அன்புடன் பார்த்தனுக்கு அருளிய சாரதி
(திரு)  அல்லிக்கேணியை

ஆயர் குலத்துதித்த அழகன் துவாரகை செல்வன்
தர்மத்தின்தலைவனாய்  கண்கொள்ளாக் காட்ஷியுடன்  
(திரு)  அல்லிக்கேணியை அரசாளும் மன்னவன்
                                    
தேரோடும் வீதியிலே ஆனந்த முகில் வண்ணன்
திவ்ய அலங்காரமாய் தேவியுடன் பவனிவர
அடியவரெல்லாம் மந்திர கோஷம் ஓதிடவே
வெகு ஆனந்தமாய் அனைவரும் கண்டுகளிக்க
(திரு)  அல்லிக்கேணியை அரசாளும் மன்னவன் 

No comments:

Post a Comment