Friday, February 21, 2014

ஶ்ரீராம ரசமே!

நாவிற்குகந்த ரசம் என்ன ரசமோ - நம்  
நாவிற்குகந்த ரசம் என்ன ரசமோ!
     
பாங்குடன் நாம் செய்த பருப்பு ரசமா
பரவஸமாய் செய்த அந்த தக்காளி ரசமா     

தைரியமுடன் செய்த திப்பிலி ரசமா
சிரத்தையுடன் நாம் செய்த ஜீரக ரசமா  

கரும்பை பிழிந்து செய்த கரும்பு ரசமா
கருத்துடன் நாம் செய்த பழ ரசமா   

எத்தனை வகை ரசங்கள் செய்தாலும் - நம் 
நாவிற்கும் மனதிற்கும் காதிற்கும் உகந்தரசம் 
ராமதாசன் அனுமன் சதா ஜபித்திடும் 
ராம ரசமே! ஶ்ரீராம ரசமே!

2 comments:

  1. அனைத்தும் அருமையாக அமைந்து உள்ளது.
    மற்ற ரசங்கள் எல்லாம் நாவிற்கே ருசி அளிப்பது.
    ராம ரசமோ நீங்கள் எழுதியபடி நாவிற்கும்
    மனதிற்கும் காதிற்கும் உகந்தரசம்

    ReplyDelete