Friday, February 14, 2014

வேங்கடநாயகா தயை புரியாயோ

ஒப்பில்லாத புகழ் உடையவனே  உனை அன்றி வேறுதுணை உளதோ 
கார்கால மேகநிறமுடையவனே கணக்கற்ற மாயச்செயல் ஆற்றவல்லவனே 
உலகளந்த உனது திருவடிகளை நான் கணப்பொழுதும் மறவேனே கண்ணா 
இவ்வடிமையை நீயும் கைவிடலாகுமோ இனியவனே இன்றி அமையாதவனே 
கோவிந்தா  கோதண்டராமா என்று நான் கதறுவது 
உனக்கு கேட்கவில்லையோ எம்மை ஆளும் ஆராவமுதனே 
ஐயா என் வினை  தீர்த்திடாயோமாயோனே
                                                                                   
தயை புரியாயோ  வேங்கடநாயகா    
தண்டனிட்டேன் உன்னை கலியுகவரதா                         
மாயம் பலநிறைந்த இப்பூவுலகினிலே   
மயங்கியே நான்உன்னை மறவாதிருக்க
தயை புரியாயோ ...

சிந்தை தனில் உன்னை இருத்தியே நான்  
ஆனந்தமாய் உன்தன் புகழ்தனை பாடிடவே        
மந்தஹாசமாய் புன்னகைத்து நிற்கும் 
மலையப்பா கோவிந்தா கருடத்வஜா  நீ                        
தயை புரியாயோ ...

No comments:

Post a Comment