Friday, February 14, 2014

குருவாயூர் வந்தானே கோகுலபாலன்

பிரளய நீரில் மிதந்த பாலனை! பரந்தாமனை! உண்ணிகருஷ்ணனை! 
பரவசமாய் குருவும் வாயுவும் பார்த்து  அள்ளி அணைத்து ஆனந்தக்கூத்தாடி  
துள்ளி ஓடும் ப்பாலகனுக்கோர் இடம்தேடியே 
பார்முழுதும் சுற்றி வந்திட அங்கோர் தடாகம் தனில் 
சக்தி சிவனின் நடனம் கண்டு பாலகனின் பிரதாபத்தை அவர்களிடம் கூறவே 

இதுவே இப்பாலகனுக்குகந்த இடம்!
இதுவே தட்ஷிணதுவாரகையான  குருவாயூர்!
என அவரும் உவகையுடனும்  பூரிப்புடனும் கூறி அன்புடன் அவர்களை வரவேற்க 
குருவாயூர் வந்தாரே  கோகுல பாலன்

கோகுலபாலன் குருவாயூர் வந்தானே - இனி குறை ஏதும் நமக்கில்லையே - அந்த
கோகுலபாலன் குருவாயூர் வந்தானே - இனி குறை ஏதும் நமக்கில்லையே

காலில் சலங்கை ஜதிகள்பாடிட கழுத்தில் ரத்தின மாலைகள் அசைந்தாட
பஞ்சாயுதம் தரித்து பாலன் பவனிவர அடியார்கெல்லாம் உற்சாகம் பொங்கிட
கோகுலபாலன் குருவாயூர் வந்தானே - இனி குறை ஏதும் நமக்கில்லையே - அந்த
கோகுலபாலன் குருவாயூர் வந்தானே - இனி குறை ஏதும் நமக்கில்லையே
                                   
மண்ணை தின்று வாயில் உலகைக் காட்டியே அன்னை யஸோதையை அயரசெய்தவன்
பால் வெண்ணெய் திருடிய பாலகனாம் நீலமேகசியாமளன் நித்ய அலங்காரரூபன்        
கோகுலபாலன் குருவாயூர் வந்தானே - இனி குறை ஏதும் நமக்கில்லையே - அந்த
கோகுலபாலன் குருவாயூர் வந்தானே - இனி குறை ஏதும் நமக்கில்லையே
  
ஆயர்பாடி கோபியர்கள் தாபமுடன் பார்த்திட ராதையுடன் கைகோர்த்து ஆடிய கள்வன்
பார்த்தனுக்கு சாரதியாய் தேரையும் ஓட்டிபல பணிகள் புரிந்த துவாரகை மன்னன்
கோகுலபாலன் குருவாயூர் வந்தானே - இனி குறை ஏதும் நமக்கில்லையே - அந்த
கோகுலபாலன் குருவாயூர் வந்தானே - இனி குறை ஏதும் நமக்கில்லையே

பஞ்ச வாத்தியங்கள் திக்கெட்டும் முழங்கிட பக்தர்கள் அனைவரும் ஆனந்தமாய் ஆட       
குறையாவும் தீர்ந்து நிறை வாழ்வு பெறவே குருவாயூர் செல்லுவோம் நாமுமே வாருங்கள்                     
கோகுலபாலன் குருவாயூர் வந்தானே - இனி குறை ஏதும் நமக்கில்லையே - அந்த
கோகுலபாலன் குருவாயூர் வந்தானே - இனி குறை ஏதும் நமக்கில்லையே

 


No comments:

Post a Comment