கண்ணா நீ வெண்ணெய் திருடிய ரகஸியத்தை எனக்குமட்டும் சொல்வாயா அப்பா!
இல்லை கண்ணா இல்லை. நானே அந்த ரகஸியத்தை கூறிவிடவா கண்ணா. உன் அழகிய பொன்மேனியை மேலும் மெருகூட்டி ராதையின் மனதில் இடம் பெருவதற்கு தானே நீ வெண்ணெயைத் திருடி உண்டாய்! மாயக்கண்ணனே!
- அரக்கியிடம் பால் அருந்தியதால் உன் அதரங்கள் சிவந்ததே அதற்கு மருந்திடவா
- மண்ணை தின்று வாயில் புண் ஏற்பட்டதால் வெண்ணெய் திருடி உண்டாயா.
- யஸோதை கட்டிய கயிற்றால் உன் இடையில் ஏற்பட்ட புண்ணில் தடவுவதற்கா.
- ஆனிரை மேய்க்க சென்றதில் கால் நொந்து அதற்கு வெண்ணெய் தடவினாயா.
- கோவர்த்தன மலையை தூக்கியதால் உன் பிஞ்சு விரலில் பட்ட காயத்திற்கு மருந்திடவா.
- குழலெடுத்து இசை இசைத்ததில் உன்கொவ்வைசெவ்வாய் கொப்பளித்து அதில் பூசவா.
இல்லை கண்ணா இல்லை. நானே அந்த ரகஸியத்தை கூறிவிடவா கண்ணா. உன் அழகிய பொன்மேனியை மேலும் மெருகூட்டி ராதையின் மனதில் இடம் பெருவதற்கு தானே நீ வெண்ணெயைத் திருடி உண்டாய்! மாயக்கண்ணனே!
No comments:
Post a Comment