Wednesday, December 4, 2013

அன்பழகா வாவா

அன்னைபராசக்தி ஈன்ற அன்பழகா வாவா 
ஆறு படைவீடுடைய ஆறுமுகா வாவா 
இன்னல்யாவும் தீர்த்திடவே இன்னமுதே வாவா 
ஈசர்க்குபதேசம் செய்த ஐயனேநீ வாவா 
உண்மைபொருள் உறைத்திடும் உத்தமனே வாவா 
ஊதுகுழலோன் மருகா முருகா நீ வாவா 
என்தன் உள்ளம் மகிழ்ந்திட என்றும் நீ வாவா 
ஏற்றங்கள் தரும் திருவேலனே நீ வாவா 
ஐங்கரத்தோனுடன் ஐயம் தீர்க்க வாவா 
ஒப்பில்லாத வள்ளலே ஓர்நிலை உணர்த்த வாவா 
ஓம்காரப்பிரணவநாதா ஷண்முகா நீ வாவா 
ஔவைக்கு அருளிய ஔடதமே நீ வாவா 
கந்தா நீ வா வா கார்த்திகேயா வா வா 

1 comment: