Thursday, August 7, 2014

பாஹி நரஸிம்மா



"பாஹி நரஸிம்மா நரஸிம்ம பாஹி" என்று கூவி அழைத்தால்
பாய்ந்தோடி வந்திடுவாய் உற்சாகமாகவே தினமும் உன்னை

"பாலகனான பக்தன் அழைத்ததற்கே தூணை பிளந்து
பிரகலாதவரதனாய் சிம்மரூபமெடுத்த நீ எம்மை
பாஹி நரஸிம்மா நரஸிம்ம பாஹி" என்று கூவி அழைத்தால்
பாய்ந்தோடி வந்திடுவாய் உற்சாகமாகவே தினமும் உன்னை

"பார்கவ, யோக, சக்ரவட, அஹோபில, வராக, மாலோல,
ஜ்வால, பாவன, காரஞ்ஜ, வெனும் நவ நரஸிம்மராக
அஹோபிலமதில் ஆனந்தமாய் தரிசனம் அளிக்கும் லக்ஷ்மி
நரஸிம்மனான உன்னை நொடிப்பொழுதும் மறவாத எம்மை
பாஹி நரஸிம்மா நரஸிம்ம பாஹி" என்று கூவி அழைத்தால்
பாய்ந்தோடி வந்திடுவாய் உற்சாகமாகவே தினமும் உன்னை


   

No comments:

Post a Comment