Monday, August 17, 2015

விஷமக் கண்ணன்

பொல்லாத கண்ணனாம் அவன் புவனமாளும் மன்னனாம்
இல்லாத வம்புகள் செய்தபின் ஓடி ஒளிவதிலே மன்னனாம்
விளையாட்டு பிள்ளையாம் கண்ணன் விஷமக்காரனாம் இன்னும்
வேடிக்கைகள் பல செய்திடும் நீலமுகில் வண்ணனாம் ஓயாமல்
கன்னியர்களை அழவைத்தே ரஸிப்பவனாம் அவன்,அன்னை வருமுன்
கன்றை கட்டவிழ்த்து  கைக்கொட்டி சிரிப்பவனாம் (பொல்லாத)
ஆடி ஆடி வந்திடுவான் ஒன்றும் அறியாதவன் போல் நின்றிடுவான்
தாடி வைத்த ஒருவன் வந்து தன்னை மிரட்டுகிறான் என்றிடுவான்
வாடா என்கண்ணே ஒன்றும் பயம்இல்லை யென்றழைத்தால் வந்து
ஒரு நொடியில் தள்ளி விட்டு ஓடி சென்று மறைந்திடுவான் ( பொல்லாத)
எங்கெல்லாமோ சுற்றிவிட்டு ஓடி வந்து உட்கார்ந்து கொள்வான்
என்னடா எங்குசென்றாய் ஏன் இப்படி ஓடி வருகிறாய் என்றால்
தண்ணீர் வேண்டும்என்று கேட்பான் தண்ணீர் எடுக்க உள்ளேசென்றால்
கதவைதாழ்ப்பாள் போட்டுவிட்டு திறக்கமாட்டேன் என்று சொல்வான்
பொல்லாத கண்ணனாம் அவன் புவனமாளும் மன்னனாம்
இல்லாத வம்புகள் செய்தபின் ஓடி ஒளிவதிலும் மன்னனாம்








No comments:

Post a Comment