Thursday, August 29, 2013

கண்ணனுடன் கோலாட்டம் ஆடுவோம்

கும்மியடித்து குதூகலித்தே நாமும் கோலாட்டமாடியே கொண்டாடுவோம்             

கண்ணனை போற்றுவோம் ஆனந்தமாய் நம் கண்ணனைபோற்றுவம் ஆனந்தமாய்          
அகிலத்தை ஆண்டிடும் மோகனரூபனை ஆயனைப்போல்வந்த கோவிந்தனை        
மண்ணை அள்ளித்தின்ற மாயவனை உறி வெண்ணை திருடி உண்டபாலகனை            
கும்மி அடித்து குதூகலித்தேநாமும் கோலாட்டமாடியே கொண்டாடுவோம்              

கண்ணனை போற்றுவோம் ஆனந்தமாய் நம் கண்ணனைபோற்றுவோம் ஆனந்தமாய்  
காளிங்கன்மேல்நடம் செய்தவனை பல கன்னியர் உடைகளை மறைத்தவனை    
வண்ணக்குழல் ஊதும் மேகநிறத்தானை எண்ணிலடங்கா வித்தைகள் செய்தவனை      
கும்மியடித்து குதூகலித்தேநாமும் கோலாட்டமாடியே கொண்டாடுவோம்        

கண்ணனை போற்றுவோம் ஆனந்தமாய் நம் கண்ணனை போற்றுவோம் ஆனந்தமாய்      
நம் கண்ணனை போற்றுவோம் ஆனந்தமாய் நம் கண்ணனை போற்றுவோம் ஆனந்தமாய்

No comments:

Post a Comment