எப்படி மனமுவந்து கொடுத்தாய் தேவஹியே
ஈரேழு புவனமாளும் மாயவனைபெற்று - நீ
எப்படி மனமுவந்து கொடுத்தாய்
முன்னூறு நாள் சுமந்துபெற்றெடுத்த மாதவனை
முத்தமிட்டு சீராட்டி பாலூட்டி வளர்க்காமல் - நீ
எப்படி மனமுவந்து கொடுத்தாய்
ஆலின் இலைமேல் துயின்ற பச்சிளம்சிசுவை
ஆதவன் வருமுன் வசுதேவரிடம் கொடுத்தனுப்பி
யமுனாநதிக்கரையில் கோகுலம்தனில் இருக்கும்
யஸோதையிடம் அளித்து வளர்க்க சொல்லிட - நீ
எப்படி மனமுவந்து கொடுத்தாய்
ஈரேழு புவனமாளும் மாயவனைபெற்று - நீ
எப்படி மனமுவந்து கொடுத்தாய்
முன்னூறு நாள் சுமந்துபெற்றெடுத்த மாதவனை
முத்தமிட்டு சீராட்டி பாலூட்டி வளர்க்காமல் - நீ
எப்படி மனமுவந்து கொடுத்தாய்
ஆலின் இலைமேல் துயின்ற பச்சிளம்சிசுவை
ஆதவன் வருமுன் வசுதேவரிடம் கொடுத்தனுப்பி
யமுனாநதிக்கரையில் கோகுலம்தனில் இருக்கும்
யஸோதையிடம் அளித்து வளர்க்க சொல்லிட - நீ
எப்படி மனமுவந்து கொடுத்தாய்